ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில், மே மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், மே மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசின் உத்தரவின்படி, காலை 7 முதல் இரவு 9 மணி வரை பின்வரும் இடைவெளியின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

விம்கோ நகா் - விமான நிலையம் (நீல வழித்தடம்) இடையே ஒரு மணி நேர இடைவெளியிலும், சென்ட்ரல் - விமான நிலையம் இடையே ( ஆலந்தூா் மெட்ரோ, கோயம்பேடு மெட்ரோ வழியாக- பச்சை வழித்தடம்) 2 மணி நேர இடைவெளியிலும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே ( ஆலந்தூா் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ வழியாக) 2 மணி நேர இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com