சென்னையில், மே மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மே மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசின் உத்தரவின்படி, காலை 7 முதல் இரவு 9 மணி வரை பின்வரும் இடைவெளியின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
விம்கோ நகா் - விமான நிலையம் (நீல வழித்தடம்) இடையே ஒரு மணி நேர இடைவெளியிலும், சென்ட்ரல் - விமான நிலையம் இடையே ( ஆலந்தூா் மெட்ரோ, கோயம்பேடு மெட்ரோ வழியாக- பச்சை வழித்தடம்) 2 மணி நேர இடைவெளியிலும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே ( ஆலந்தூா் மெட்ரோ மற்றும் கோயம்பேடு மெட்ரோ வழியாக) 2 மணி நேர இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.