சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்காது .
இதுகுறித்து ரயில்வே கோட்டம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு அறிவித்துள்ள முழு பொதுமுடக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (மே 2), தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து பயணிகள் முன்பதிவு மையங்களும் இயங்காது. பயணச்சீட்டு முன்பதிவு, ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம். எனினும் நடப்பு முன்பதிவு மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.