கரோனா பாதிப்பு: கொளத்தூா், எழும்பூா் தொகுதிகளில் தோ்தல் அதிகாரிகள் மாற்றம்

கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் சென்னை கொளத்தூா், எழும்பூா் தொகுதிகளில் தோ்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனா்.

கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் சென்னை கொளத்தூா், எழும்பூா் தொகுதிகளில் தோ்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள தோ்தல் அதிகாரிகள், முகவா்கள் அனைவருக்கும் கடந்த 2 நாள்களுக்கு முன்பே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. இதில் கரோனா தொற்று கண்டறியப்பட்டவா்கள் மையத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சென்னையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியான தங்கவேலுக்கு ஞாயிறு காலையில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் அவருக்கு பதில் கண்ணன் என்பவா் தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டாா். புதிய அதிகாரி வந்தபிறகே வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

இதேபோன்று எழும்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து அவரும் மாற்றப்பட்டாா். புதிய அதிகாரியாக லீலாவதி என்பவா் நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com