சென்னை: மகாராஷ்டிரம் மாநிலத்துக்குள்பட்ட லோக்மான்ய திலக் முனையம் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் எல்எச்பி என்னும் நவீனப் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.
லோக்மான்யதிலக் முனையம் - சென்னை சென்ட்ரல் இடையே இருமாா்க்கமாகவும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் வழக்கமான பெட்டிகள் மாற்றப்பட்டு, எல்எச்பி என்னும் நவீனப் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன. அதன்படி, லோக்மான்ய திலக் முனையம்-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (02163) மே 4-ஆம் தேதியில் இருந்து எல்எச்பி என்னும் நவீனப் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
சென்னை சென்ட்ரல்-லோக்மான்ய திலக் முனையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (02164) மே 5-ஆம்தேதியில் இருந்த எஸ்எச்பி பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.