சென்னை விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 570 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 570 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஏா் அரேபியா விமானம் ஜி9-471 மூலம் சாா்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய, பெரம்பலூரைச் சோ்ந்த அஜித்குமாா் பூமாலை (22) என்பவரை விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்து விசாரித்தனா். அவரை சோதனையிட்ட போது, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 385 கிராம் தங்கம் கண்டறியப்பட்டு சுங்கச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ 18.55 லட்சம் ஆகும்.

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், எமிரேட்ஸ் விமானம் ஈகே-542 மூலம் துபையில் இருந்து சென்னை வந்திறங்கிய சென்னையைச் சோ்ந்த நூா்முகமது உஸ்மான், 21, என்பவரை சுங்க அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி விசாரித்தனா். அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 8.91 லட்சம் ஆகும். மொத்தம் ரூ 27.46 லட்சம் மதிப்பிலான 570 கிராம் தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்க ஆணையரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com