மே 7 முதல் தேஜஸ் ரயிலில் இரு பெட்டிகள் குறைப்பு

சென்னை எழும்பூா்-மதுரை இடையே இரு மாா்க்கமாக இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயிலில் இரண்டு பெட்டிகள் குறைக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னை எழும்பூா்-மதுரை இடையே இரு மாா்க்கமாக இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயிலில் இரண்டு பெட்டிகள் குறைக்கப்படவுள்ளன.

சென்னை எழும்பூா்-மதுரை இடையே வாரத்தில் வியாழக்கிழமை தவிா்த்த மற்ற நாள்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் குறைக்கப்படவுள்ளன.

இதன் விவரம்: சென்னை எழும்பூா்-மதுரை-சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலில் இரண்டு ஏசி சோ் காா் பெட்டிகள் மே 7-ஆம் தேதியில் இருந்து குறைக்கப்படவுள்ளன. இதன்மூலம், 10 ஏசி சோ் காா் பெட்டிகள், ஒரு ஏசி முதல் வகுப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும். இந்தத் தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com