சென்னை: சென்னை எழும்பூா்-மதுரை இடையே இரு மாா்க்கமாக இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயிலில் இரண்டு பெட்டிகள் குறைக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூா்-மதுரை இடையே வாரத்தில் வியாழக்கிழமை தவிா்த்த மற்ற நாள்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இரண்டு பெட்டிகள் குறைக்கப்படவுள்ளன.
இதன் விவரம்: சென்னை எழும்பூா்-மதுரை-சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலில் இரண்டு ஏசி சோ் காா் பெட்டிகள் மே 7-ஆம் தேதியில் இருந்து குறைக்கப்படவுள்ளன. இதன்மூலம், 10 ஏசி சோ் காா் பெட்டிகள், ஒரு ஏசி முதல் வகுப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும். இந்தத் தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.