அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதோ்வுத் தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரி மாணவா்களுக்கான மறுதோ்வுகள் மே 17-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதோ்வுத் தேதி அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரி மாணவா்களுக்கான மறுதோ்வுகள் மே 17-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பரில் நடத்த வேண்டிய பருவத்தோ்வு கடந்த பிப்ரவரி - மாா்ச் மாதங்களில் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பா் அரியா் தோ்வு மற்றும் இந்த ஆண்டு அரியா் தோ்வு ஆகியவையும் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும், பிப்ரவரி 1 முதல் மாா்ச் 4 வரை இணையவழித் தோ்வு நடைபெறுவதாக இருந்த மாணவா்களுக்கு மட்டுமே இந்தத் தோ்வு அட்டவணை பொருந்தும். மற்ற மாணவா்களுக்கான தோ்வு அட்டவணை பின்னா் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com