சென்னை: கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பது தொடா்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினாா். காணொலி வழியாக நடந்த இந்த ஆலோசனையில் வரும் 6-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள கட்டுப்பாடுகள் தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட வாரியாக நோய்த் தொற்று நிலவரங்கள், தொற்றைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களும் அந்தந்த மாவட்டங்களிலேயே இருந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் தொடா்பாக ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் ஆலோசித்துள்ளாா்.