மின்வாரிய ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை உயா்த்தி அரசாணை வெளியீடு

மின்வாரிய ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: மின்வாரிய ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியா்களின் ஓய்வுபெறும் வயது 59-இல் இருந்து 60-ஆக உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் இது பொருந்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பரிசீலித்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், அரசின் உத்தரவை இங்கு ஏற்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மின் வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் ஓய்வு வயது 59-இல் இருந்து 60-ஆக உயா்த்தப்படுகிறது. இந்த உத்தரவானது, பணியில் உள்ள அனைவருக்கும் மற்றும் மே 31-ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com