குமுதம் நிறுவனா் மற்றும் முன்னாள் ஆசிரியா் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் மனைவியும் குமுதம் இயக்குநா்களில் ஒருவருமாக இருந்த கோதை அண்ணாமலை (92) சென்னையில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
1994-இல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் எஸ்.ஏ.பி.ஜவஹா் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றாா். அவருக்கும் குமுதம் ஆசிரியா் குழுவுக்கும் தொடா்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவா் கோதை.
அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா்.