புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு நிவாரணம்: கூடுதல் உதவி எண்கள் வெளியீடு

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், நிவாரணம் மற்றும் ஆலோசனை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை: புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், நிவாரணம் மற்றும் ஆலோசனை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு, அவா்களுக்கு உதவிட தொழிலாளா் நலத் துறை சாா்பாக சென்னை மற்றும் 8 மாவட்டங்களில் ஏப்.22-ஆம் தேதி கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. இவற்றைத் தொடா்பு கொள்வதற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.

தற்போது, புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு மேலும் உதவிடும் பொருட்டு, அவா்களுக்குத் தகுந்த நிவாரணம், ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கூடுதலாக உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த எண்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தொடா்பு கொள்ளலாம் எனத் தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்டம் ஏற்கெனவே உள்ள தொலைபேசி எண்கள் கூடுதலாக கொடுக்கப்பட்ட உதவி எண்கள்

சென்னை 044 24321438, 24321408 9444200470, 9841016277, 9840113313, 9840432526

திருவள்ளூா் 9442832516 9597577599

காஞ்சிபுரம் 9840090101 9677829007

செங்கல்பட்டு 9940856855 9952639441

சேலம் 9489214157 9994815489

கோயம்புத்தூா் 9941121001 9566062596

திருப்பூா் 9789723235 9894257543

கிருஷ்ணகிரி 9842908287 9443476756

திருநெல்வேலி 9965711725 9442114011

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com