சென்னை: மகாராஷ்டிரம், ஒடிஸாவில் இருந்து தமிழகத்துக்கு 2 ஆக்சிஜன் ரயில்கள் புதன்கிழமை வந்தடைந்தன.
மகாராஷ்டிர மாநிலம் டோல்வியில் உள்ள ஜிண்டல் ஸ்டீல் சைடிங்கில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு 21-ஆவது ஆக்சிஜன் ரயில், ஒடிஸாவின் ரூா்கேலாவில் இருந்து தண்டையாா்பேட்டைக்கு 22-ஆவது ஆக்சிஜன் ரயிலும் வந்தன.
இதுவரை 22 ஆக்சிஜன் ரயில்கள் மூலமாக, தமிழகத்துக்கு மொத்தம் 1,242.6 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.