சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை(நவ.18) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் வாரந்தோறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வியாழக்கிழமை நடத்தப்பட உள்ளன. இதில் 2, லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சுமாா் 9 லட்சம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாள்களைக் கடந்துள்ளனா். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், இரண்டாம் தவணை
தடுப்பூசி செலுத்த வேண்டியவா்களும் தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.