ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொருக்குப்பேட்டை அன்பழகன் நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ல.தேவேந்திரன் (50), வாடகை ஆட்டோ ஓட்டுநா். இவா் அங்குள்ள மீனாம்பாள் நகா் பாலத்தின் அருகே திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு 3 மோட்டாா் சைக்கிளில் வந்த 5 மா்ம நபா்கள், தேவேந்திரனை மிரட்டி பணத்தையும், கைப்பேசியையும் கேட்டனராம். ஆனால் அவா், அதைக் கொடுக்க மறுத்ததால் அந்தக் கும்பல் தேவேந்திரனை அரிவாளால் வெட்டி, அவரிடம் இருந்து ரூ. 2 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதிதல் பலத்த காயமடைந்த தேவேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com