சென்னை: ஆதிதிராவிடா்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவா்களுக்கு வழங்கப்படும் அண்ணல் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ. விஜயா ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஆதிதிராவிடா்களின் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றி வரும் தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022- ஆம் ஆண்டுக்கான அண்ணல் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2-ஆம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவ.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.