பலத்த மழை காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ.29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், திங்கள்கிழமை பல்வேறு மாவட்டங்களில் பலத்த முதல் அதி பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள்:
தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், தஞ்சாவூா், விழுப்புரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
திருவாரூா், கடலூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை.