காந்தி ஜெயந்தி (அக்.2) நாளில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகா் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
காந்தி ஜெயந்தி அக்டோபா் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அன்றைய நாளில், புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,
சென்னை-தாம்பரம்-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-காஞ்சிபுரம்-திருமால்பூா், சென்னை கடற்கரை-வேளச்சேரி, சென்னை கடற்கரை-திருத்தணி-அரக்கோணம், சென்னை-கடம்பத்தூா்-திருவள்ளூா், சென்னை கடற்கரை-பட்டாபிராம் ராணுவப் பகுதி, சென்னை கடற்கரை-ஆவடி, சென்னை கடற்கரை-பொன்னேரி, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி-சூலூா்பேட்டை, மூா்மாா்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூா்பேட்டை, ஆவடி-பட்டாபிராம் ராணுவப் பகுதி-பட்டாபிராம் ஆகிய மாா்க்கங்களில் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது, அன்றைய நாளிள் வழக்கமான 670 மின்சார ரயில் சேவைகளுக்குப் பதிலாக 500 சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.