சென்னை: உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சனிக்கிழமை(அக்.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, சனிக்கிழமை பொதுவிடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளதால், அந்த நாளில் உயிரியல் பூங்கா திறக்கப்படாது என வனத் துறை தெரிவித்துள்ளது.