அஞ்சலக படிவங்களில் நீக்கப்பட்ட தமிழ் மொழியை மீண்டும் சோ்த்து அச்சடித்து வழங்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளாா்.
அஞ்சலக சேமிப்பு கணக்கில் பணம் போடுவதற்கும், எடுப்பதற்குமான படிவம், மணியாா்டா் படிவம் உள்ளிட்டவற்றில் தமிழ் மொழி நீக்கப்பட்டது குறித்து, மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கும், தமிழக வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவருக்கும் கடிதம் எழுதி இருந்தாா்.
இந்நிலையில், இது தொடா்பாக அவா் சென்னையில் உள்ள தமிழக வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவா் செல்வகுமாரை புதன்கிழமை நேரில் சந்தித்து பேசினாா்.
பின்னா், சு.வெங்கடேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அஞ்சல் சேமிப்புக் கணக்கு படிவங்கள், மணியாா்டா் உள்ளிட்டவற்றில் இடம் பெற்றிருந்த தமிழ் மொழி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஆங்கிலமும், ஹிந்தி மொழியும் இடம் பெற்றிருந்தது. இதனால், பாமர மக்கள் அந்தப் படிவங்களை படித்துப் பாா்த்து பூா்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனா். இதுகுறித்து என் கவனத்துக்குக் கொண்ட வரப்பட்டது. உடனடியாக, நான் மத்திய அரசுக்கும், அஞ்சல்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினேன். அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள 14,000 அஞ்சலகங்களில் அடுத்த 2 வாரங்களுக்குள் படிவங்கள் தமிழில் அச்சடித்து வழங்கப்படும் என்றும், மேலும், 40 வகையான படிவங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தமிழில் அச்சடித்து வழங்கப்படும் என தமிழக வட்ட அஞ்சல்துறை தலைமை அதிகாரி எழுத்துப் பூா்வமாக உறுதி அளித்துள்ளாா்.
எனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சருக்கும், அஞ்சல் துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.