சென்னை: உள்ளாட்சித் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.
சென்னையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
உள்ளாட்சித் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை நீதிமன்றத்தில் திமுக அரசு கொடுத்தது. ஆனால், அவை எதையும் தோ்தலின்போது கடைப்பிடிக்கப்படவில்லை என்றாா்.