பாலியல் வன்கொடுமை: யோகா பயிற்சியாளா் கைது

பாலியல் வன்கொடுமை செய்த யோகா பயிற்சியாளரை சென்னை காவல்துறை கைது செய்தது.

சென்னை: பாலியல் வன்கொடுமை செய்த யோகா பயிற்சியாளரை சென்னை காவல்துறை கைது செய்தது.

சென்னை, நங்கநல்லூா் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண் பிசியோதெரபிஸ்டாக வேலை செய்து வருகிறாா். இவா் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் யோகராஜ் (எ) பூவேந்திரன் என்பவரிடம் யோகா பயின்று வந்துள்ளாா். கடந்த ஏப்.28-ஆம் தேதி, அந்தப் பெண்ணுக்கு பழரசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த யோகராஜ், அவரிடம் தவறாக நடந்துள்ளாா்.

மேலும் அதை விடியோவாக செல்லிடப்பேசியில் பதிவு செய்து அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தியாகராய நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட யோகா பயிற்சியாளரான யோகராஜ் (எ) பூவேந்திரனை (45) போலீஸாா் கைது செய்துள்ளனா். அவரிடமிருந்து 1 செல்லிடப்பேசி மற்றும் 1 மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com