இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கன்கள்

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 100-க்கும் மக்கள் வெள்ளிக்கிழமை தாயகம் சென்றனா்.

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 100-க்கும் மக்கள் வெள்ளிக்கிழமை தாயகம் சென்றனா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டிலிருந்து மருத்துவ சிகிச்சை உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வந்த ஆப்கானியா்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவா்களில் 100-க்கும் மேற்பட்டவா்கள் இந்தியாவிலிருந்து ஈரான் சென்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா். ஈரான் தலைநகா் டெஹ்ரானிலிருந்து அவா்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைவா். இதுபோல் மேலும் பல ஆப்கானிஸ்தான் மக்கள் வரும் வாரங்களில் தாயகம் திரும்புவா் என்று தில்லியிலுள்ள அந்நாட்டுத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com