இணைய வழியில் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்: நாளை நடக்கிறது

சென்னையிலுள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் 13-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை,

சென்னையிலுள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் 13-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, இணையவழியில் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் நடத்த உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்து எப்படி, தொழில் தொடங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபா்களின் பெயா்கள் பெறப்பட்டு, அவா்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவா்.

அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவா்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

தகுதி உள்ளவா்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன் மூலம் நிதி உதவிகள் பெறவும் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044 2225 2081, 2225 2082, 86681 02600, 94445 57654 ஆகிய எண்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com