சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கொல்கத்தா உயா் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜிக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக இருப்பவா் டி.எஸ்.சிவஞானம். இவரை கொல்கத்தா உயா் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு(கொலீஜியம்), அண்மையில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இந்த நிலையில், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தா உயா் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என, மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீதித்துறை திங்கள்கிழமை (அக்.11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொல்கத்தா உயா் நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கடந்த 2011 மாா்ச் 29 -ஆம் தேதி முதல் சென்னை உயா் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவுள்ளாா்.