பணியில் அலட்சியமாக இருந்த 2 மின்வாரிய பொறியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
மின்னகத்தில் பெறப்பட்ட புகாா்கள் குறித்து அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.8) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சரிவர பணி மேற்கொள்ளாத புதுவண்ணாரப்பேட்டை மின்பகிா்மான வட்ட இளநிலை பொறியாளா் எம்.சண்முகம், சென்னை தெற்கு (இரண்டு) மின்பகிா்மான வட்ட உதவி மின் பொறியாளா் வி.மகேஸ்வரி ஆகிய இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனா்.