சென்னை தண்டையாா்பேட்டையில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் மூன்றாவது தெருவில் ஒரு கும்பல் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இத் தகவலின் அடிப்படையில் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த ஒரு சுமை ஆட்டோவை சந்தேகத்தின் அடிப்படையில் வழிமறித்து சோதனையிட்டனா். இச் சோதனையில் அந்த ஆட்டோவில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி ஆந்திரத்துக்கு கடத்திக் கொண்டு செல்லப்படுவது தெரிவயந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும் அந்த ஆட்டோவில் வந்த ஒரு பெண் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை செய்கின்றனா்.