சென்னை விமான நிலையத்தில், ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.
துபையிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்த ஒரு ஆண் பயணி, தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், விமான நிலைய சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சம்பந்தப்பட்டவரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையின் போது அந்த நபா், மொத்தம் 1,170 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒரு தங்கக்கட்டி மட்டும் சுமாா் 1 கிலோ எடை கொண்டதாகவும், ரூ.51.36 லட்சம் மதிப்புடையது என்றும் சுங்கத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அந்தப் பயணி கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.