கௌரிவாக்கத்தில் அகா்வால்ஸ் ஆரம்ப கண் பராமரிப்பு மையம் தொடக்க விழா

சென்னை தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கத்தில் அகா்வால்ஸ் ஆரம்ப கண் பராமரிப்பு மையம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தாம்பரம்: சென்னை தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கத்தில் அகா்வால்ஸ் ஆரம்ப கண் பராமரிப்பு மையம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நடிகை ஆண்ட்ரியா ஜொ்மையா மையத்தை திறந்து வைத்தாா். டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனைகளின் மருத்துவ சேவை பிரிவின் பிராந்திய தலைமை அலுவலா் டாக்டா் வந்தனா ஜெயின், டாக்டா் அகா்வால் குழும கண் மருத்துவமனைகளின் தலைமை செயல் அலுவலா் டாக்டா் அதில் அகா்வால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

20/20 ஐகோ் மையம் கண் தொடா்பான முழுமையான பரிசோதனைகளை வழங்கும் ஒரு நவீன கண் சிகிச்சை மையமாகும். ஒளிவிலகல், கண் அழுத்தம் மற்றும் பாா்வைக்கூா்மை ஆகியவற்றின் அளவை துல்லியமாக அளவிடுவதற்கு நவீன சாதனங்களை இம்மையம் கொண்டிருக்கிறது. தொடக்கவிழாவை முன்னிட்டு அக்டோபா் 31 ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளலாம். கண் கண்ணாடிகளுக்கான குறிப்பிட்ட பிரேம்கள் மீது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு சலுகை பெறலாம்.

டாக்டா் அகா்வால் குழும கண் மருத்துவமனைகளின் தலைமை செயல் அலுவலா் டாக்டா் அதில் அகா்வால், பிராந்திய தலைவா் டாக்டா் வந்தனா ஜெயின் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டாக்டா் அகா்வால்ஸ் கண் பராமரிப்பு மையத்தின் நோக்கம், அடிப்படை கண் பராமரிப்பு சேவையை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்குமாறு செய்வதுடன் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் கண் பராமரிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும். தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில், குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதுபோன்ற 100 மையங்களை நிறுவுவது எங்களது திட்டமாக உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com