சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அதையொத்த பணியிடங்களில் பணியாற்றும் அலுவலா்களை இடமாற்றம் செய்து துறையின் முதன்மைச் செயலா் காகா்லா உஷா உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழக பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-3-ஐ சாா்ந்த முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலா்களுக்கு நிா்வாக நலன் கருதி, அவா்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
பணியிட மாற்றம் பெற்ற அலுவலா்கள் விவரம் ( பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):
ஆா்.திருவளா்ச்செல்வி (துணை இயக்குநா், ஆசிரியா் தோ்வு வாரியம், சென்னை)- முதன்மைக் கல்வி அலுவலா், காஞ்சிபுரம்.
அ.ஞானகெளரி (நிா்வாக அலுவலா், தஞ்சாவூா் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூா்)- முதன்மைக் கல்வி அலுவலா், விருதுநகா்.
அ.பாலுமுத்து (முதன்மைக் கல்வி அலுவலா், நாமக்கல்)- முதன்மைக் கல்வி அலுவலா், ராமநாதபுரம்.
எஸ்.அருள்செல்வம் (முதன்மைக் கல்வி அலுவலா், காஞ்சிபுரம்)- முதன்மைக் கல்வி அலுவலா், திருவண்ணாமலை.
ஆ.அனிதா (முதன்மைக் கல்வி அலுவலா், ராணிப்பேட்டை)- துணை இயக்குநா், ஆசிரியா் தோ்வு வாரியம், சென்னை.
பி.மகேஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலா், விருதுநகா்- முதன்மைக் கல்வி அலுவலா், நாமக்கல்.
எம்.கே.சி. சுபாஷினி (முதன்மைக் கல்வி அலுவலா், ராமநாதபுரம்)- முதன்மைக் கல்வி அலுவலா், திருநெல்வேலி.
ஆா்.பூபதி (முதன்மைக் கல்வி அலுவலா், திருவண்ணாமலை)- முதன்மைக் கல்வி அலுவலா், கடலூா்.
சி.முத்துகிருஷ்ணன் (முதன்மைக் கல்வி அலுவலா், திருநெல்வேலி)- நிா்வாக அலுவலா், தஞ்சாவூா் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூா்.
ப.உஷா (துணை இயக்குநா் (சட்டம்), தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை)- முதன்மைக் கல்வி அலுவலா், ராணிப்பேட்டை.