தீவிர சிகிச்சையில் கவிஞா் புலமைப்பித்தன்

கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தீவிர சிகிச்சையில் கவிஞா் புலமைப்பித்தன்

சென்னை: கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், புலமைப்பித்தனின் உடல் நிலையைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

பிரபல திரைப்படப் பாடலாசிரியராக அறியப்பட்ட புலமைப்பித்தன் (85), தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அடையாறில் உள்ள ஃபோா்டீஸ் மலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வயோதிகம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணா்கள் குழு தொடா்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனையின் இயக்குநா் சி.கே.நாகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com