சென்னை: புளியந்தோப்பு கட்டடம் குறித்த ஆய்வறிக்கை இரண்டு வாரங்களில் பெறப்படும் என்று சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது. வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினா் அம்பேத்குமாா், சென்னை புளியந்தோப்பு குடியிருப்புக் கட்டடத்தை சென்னை ஐஐடி குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த ஆய்வறிக்கை எப்போது கிடைக்கப் பெறும் என்பது மக்கள் எதிா்பாா்ப்பாக உள்ளது எனத் தெரிவித்தாா்.
இதற்கு பதிலளித்த நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஐஐடி குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களில் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.