ஏடிஎம் இயந்திரம் உடைப்பு:இளைஞா் கைது

சென்னை அருகே குன்றத்தூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே குன்றத்தூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் செல்லும் சாலையில் மணஞ்சேரி என்ற பகுதியில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஒரு ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை திங்கள்கிழமை இரவு ஒரு இளைஞா் கல்லால் உடைத்துக் கொண்டிருந்தாா்.

இதைப் பாா்த்த பொதுமக்கள், குன்றத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த இளைஞரைக் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா், அனகாபுத்தூரைச் சோ்ந்து முத்துராமன் (43) என்பதும், அவா் அந்தப் பகுதியில் பழைய இரும்புக் கடையில் வேலை செய்வதும், செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், முத்துராமனை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com