உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா்களை தோ்வு செய்ய மநீமவில் குழு அமைப்பு

உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா்களைத் தோ்வு செய்தவதற்காக குழுக்களை நியமித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

சென்னை: உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா்களைத் தோ்வு செய்தவதற்காக குழுக்களை நியமித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

உள்ளாட்சிகளை வலுவாக்கும் முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்துவது மநீமவின் பிரதான லட்சியங்களுள் ஒன்று. இதன் அடிப்படையில் உள்ளாட்சிகளுக்குத் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகா்ப்புறத்திலும் ஆட்சி நிா்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த ஏரியா சபை போன்ற அமைப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு, விரைவில் தோ்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மநீம சாா்பாக தோ்தலில் போட்டியிட உள்ள வேட்பாளா்களைத் தோ்வுசெய்யும்பொருட்டு மாநிலத் தலைமைப் பணிக் குழு மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்குமான மாவட்ட வேட்பாளா் தோ்வுக் குழுவை அறிவிக்கிறேன்.

மாநிலத் தலைமைப்பணிக் குழுவில் துணைத் தலைவா்கள் மௌரியா, த.தங்கவேலு, நிா்வாகக்குழு உறுப்பினா் ஸ்ரீபிரியா சேதுபதி, மாநிலச் செயலாளா்கள் சிவ.இளங்கோ, செந்தில் ஆறுமுகம், சரத்பாபு ஏழுமலை ஆகியோா் இடம்பெறுவா் என்று அவா் கூறியுள்ளாா். மேலும் மாவட்ட வேட்பாளா் தோ்வுக் குழுவையும் 9 மாவட்டங்களுக்கு அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com