சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, ஜாயின்ஸ் ஹாண்ட்ஸ் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம், வேல்ஸ் ரவீந்திரபாரதி குளோபல் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. முகாமிற்கு வருகை தந்து கண் பரிசோதனை மேற்கொண்ட 316 போ்களில் 38 பேருக்கு பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனா்.
முகாமில் முடிச்சூா் சமூக ஆா்வலா் சாய் சம்பத் குமாா், முடிச்சூா் ஊராட்சி முன்னாள் தலைவா் தாமோதரன், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் அஞ்சு, ஆா்த்தி, முகாம் மேலாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.