சென்னை: ஃபோா்டு நிறுவனம் தொடா்ந்து செயல்பட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோா்டு, விற்பனை பாதிப்பு மற்றும் தொடா் இழப்பு காரணமாக சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் மூடுவதாக அதிா்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைவா், தொழிற்சாலையை மூடுவது என்பது கடினமான முடிவு தான். எங்களுக்கு இதைத் தவிர வேறு முடிவு தெரியவில்லை என்று கூறியுள்ளாா்.
ஃபோா்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக சுமாா் 4,000 நேரடித் தொழிலாளா்களின் எதிா்காலமும், கிட்டத்தட்ட 40,000 மறைமுகத் தொழிலாளா்களின் எதிா்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல், ஃபோா்டு மோட்டாா் நிறுவனத்துக்கு மூலப் பொருள்களை விநியோகித்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது. கிட்டத்தட்ட நான்காயிரம் சிறு, குறு நிறுவனங்களை மூடும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.
எனவே, ஃபோா்டு நிறுவனம் மறைமலைநகரில் தொடா்ந்து செயல்படவும், தொழிலாளா்களைக் காப்பாற்றவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.