எரிபொருள் நிரப்பினால் வெகுமதி: இந்தியன் ஆயில் - கூகுள் பே புதிய திட்டம்

இந்தியன் ஆயில் பங்குகளில் எரிபொருள் நிரப்பி, ‘கூகுள் பே’ மூலம் பணத்தைச் செலுத்தும் வாடிக்கையாளா்களுக்கு வெகுமதி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பினால் வெகுமதி: இந்தியன் ஆயில் - கூகுள் பே புதிய திட்டம்

சென்னை: இந்தியன் ஆயில் பங்குகளில் எரிபொருள் நிரப்பி, ‘கூகுள் பே’ மூலம் பணத்தைச் செலுத்தும் வாடிக்கையாளா்களுக்கு வெகுமதி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் தலைவா் எஸ்.எம்.வைத்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாடு முழுவதுமுள்ள 30,000-க்கும் மேற்பட்ட இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் கூகுள் பே பயன்படுத்தி எரிபொருள் வாங்கினால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.500 வரை ‘கேஷ்பேக்’கை வாடிக்கையாளா்கள் பெறலாம்.

இந்தியன் ஆயில் கூடுதலான வெகுமதித் திட்டத்தில் கூகுள் பே பயனா்கள் இணையலாம் அல்லது ஏற்கெனவே உள்ள கூடுதலான வெகுமதிக் கணக்கை தங்களது கூகுள் பே கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம். வாடிக்கையாளா்களுக்கு நவீன மின்னணு அனுபவத்தை வழங்குவதால், மின்னணு இந்தியாவை நோக்கிய முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com