சென்னை: துபையில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1.34 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவா் கைது செய்யப்பட்டாா்.
கொச்சி வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் அளித்த உளவுத் தகவல் அடிப்படையில், துபையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில், சென்னை வந்த 28 வயது பெண் பயணியிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
அதில், அந்தப் பெண்ணின் உள்ளாடை மற்றும் மலக்குடலில் ரூ.65 லட்சம் மதிப்பிலான 1.34 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சுங்கச்சட்டத்தின் கீழ் அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக, சென்னை அண்ணா சா்வதேச விமான நிலைய முதன்மை சுங்க ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.