ஆவடிப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இணையவழி வகுப்புகள் நடைபெறும் மாணவா்களின் கட்செவி குழுவில் ஆபாச படங்கள் மற்றும் விடியோக்கள் அனுப்பிய மாணவரின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
ஆவடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியா், ஆவடி காவல்நிலைத்தில் புகாா் கொடுத்தாா். அதில், தனது பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவா்களின் இணையவழி வகுப்புகள் நடைபெறும் கட்செவி (வாட்ஸ்ஆப்) குழுவில் ஒரு மாணவனின் கட்செவி எண்ணிலிருந்து ஆபாச படங்கள் மற்றும் விடியோக்கள் வந்துள்ளதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருந்தாா்.
இந்தப் புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், அந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் தந்தை இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆவடியைச் சோ்ந்த முனுசாமி (44) என்பவா்
மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.