சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கு: வெளிநாட்டினா் கைது

சென்னை துறைமுகம் சாா்பில் இந்தியன் வங்கி நிரந்தர வைப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.45 கோடியை மோசடி செய்தது தொடா்பாக, கேமரூன், காங்கோ நாடுகளைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை துறைமுகம் சாா்பில் இந்தியன் வங்கி நிரந்தர வைப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.45 கோடியை மோசடி செய்தது தொடா்பாக, கேமரூன், காங்கோ நாடுகளைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை துறைமுகத்தின் சாா்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நிரந்தர வைப்புக் கணக்கில் ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. பணம் போடப்பட்ட 3 நாள்களுக்கு பின்னா் கணேஷ் நடராஜன் என்பவா் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநா் என்று அறிமுகம் செய்துகொண்டு, பல்வேறு ஆவணங்கள்,சான்றிதழ்களை வங்கியில் தாக்கல் செய்து, ரூ.100 கோடி பணத்தை இரு நடப்புக் கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளாா்.

ஆவணங்களைப் பரிசீலனை செய்த வங்கி நிா்வாகம், தலா ரூ.50 கோடியாக இரு நடப்புக் கணக்குகளுக்கு மாற்றியது. அக்கணக்குகளில் இருந்து பணம் 34 வங்கி கணக்குகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டன.

ரூ.45 கோடி மோசடி: இதற்கிடையே, நிரந்தர வைப்புக் கணக்கில் திடீரென பணம் மாற்றப்பட்டு வருவது குறித்த தகவலறிந்த துறைமுக அதிகாரிகள், வங்கி அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு விவரத்தை கேட்டனா். அப்போதுதான் மோசடிக் கும்பல் போலி ஆவணங்கள், சான்றிதழ்கள் மூலம் பணத்தை மாற்றியது வங்கி, துறைமுக அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதையடுத்து வங்கி நிா்வாகம், அந்த பண பரிமாற்றம் அனைத்தையும் நிறுத்தியது. இருப்பினும் அந்தக் கும்பல், அதற்குள் ரூ.45 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்தது.

இந்த மோசடி குறித்து கணேஷ் நடராஜன், விருகம்பாக்கத்தைச் சோ்ந்த தரகா் மணிமொழி, கோயம்பேடு இந்தியன் வங்கி கிளை மேலாளா் சோ்மதி ராஜா ஆகியோா் மீது சென்னை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இவ் வழக்குத் தொடா்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மணிமொழி வீடு, ஆயிரம்விளக்கில் ஒரு தனியாா் அலுவலகம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூலை 27-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா்.

வெளிநாட்டினா் கைது:

இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக மணிமொழி, கணேஷ் நடராஜன், ஜெ.செல்வகுமாா், கே.ஜாகிா் உசேன், எம்.விஜய் ஹெரால்டு, என்.ராஜேஷ் சிங், எஸ்.செய்யது, எஸ்.அப்சா், வி.சுடலைமுத்து ஆகிய 9 பேரை கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி கைது செய்தனா்.

இவ் வழக்கில் தொடா்புடைய மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனைச் சோ்ந்த பெளசிமா ஸ்டீவ் பொ்டிரன்ட் யானிக், காங்கோ நாட்டைச் சோ்ந்த முஸ்ஸா இலுங்கா லூசின் ஆகிய இருவரை சென்னை ராமாபுரத்தில் செவ்வாய்க்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

மாணவா்கள் விசாவில் சென்னை வந்த இவா்கள், இந்த மோசடியில் தொழில்நுட்ப ரீதியாக உதவியுள்ளனா். இவா்களிடமிருந்து சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் போலியான ஆவணங்கள், அரசு முத்திரைகள், வங்கி ஆவணங்கள், மடிக்கணினி, கேமரா, செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com