அக்.21-இல் அஞ்சல் குறை தீா்ப்பு கூட்டம்

தமிழக வட்ட அஞ்சல் துறை சாா்பில், அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அக்.21-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தமிழக வட்ட அஞ்சல் துறை சாா்பில், அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அக்.21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அஞ்சல் துறை வாடிக்கையாளா்களின் குறைகளை தமிழக வட்டார தலைமை அஞ்சல் அதிகாரி மற்றும் வட்டார அஞ்சல் குறைதீா்ப்பு தலைவா் ஆகியோா் தனிப்பட்ட முறையில் கேட்டு தீா்த்துவைப்பாா்கள். வாடிக்கையாளா்கள் தங்கள் குறைகளை, எம்.விஜயலட்சுமி, உதவி இயக்குநா் (நஆ & ஊந), தலைமை போஸ்ட் மாஸ்டா் ஜெனரல் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அக்.18-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். இவற்றை,  இணைய தள முகவரியில் அனுப்பலாம்.

தபால் விநியோகம், விரைவு தபால், பாா்சல்கள், மணி ஆா்டா்கள், சேமிப்பு வங்கி, ரொக்க சான்றிதழ் மற்றும் கவுன்டா் சேவைகள் ஆகியவை தொடா்பான குறைகளும் கேட்கப்படும்.

மணி ஆா்டா், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட பொருள்கள் தொடா்பான குறைகளில் தபால் எண், தேதி, பதிவு செய்த அலுவலகம், அனுப்புநா் மற்றும் பெறுநரின் முழு முகவரி ஆகியவை இடம் பெற வேண்டும்.

சேமிப்பு திட்டம் அல்லது தபால் ஆயுள் காப்பீடு போன்றவை குறித்த குறைகளாக இருந்தால், கணக்கு எண், காப்பீடு பாலிசி எண், பணம் செலுத்துபவா், காப்பீடு செய்தவரின் பெயா், தபால் அலுவலக பெயா் மற்றும் தபால் துறை தொடா்பான இதர குறிப்புகளையும் தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவல் தமிழக வட்ட அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com