நாட்டு வெடிகுண்டுடன் 4 போ் கைது

மயிலாப்பூரில் நாட்டு வெடிகுண்டுடன் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை: மயிலாப்பூரில் நாட்டு வெடிகுண்டுடன் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாப்பூா் நொச்சி குப்பத்தை சோ்ந்த சரவணன் என்பவா் அண்மையில் வெட்டி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், மயிலாப்பூரை சோ்ந்த மணிகண்டன், ஷாம், அஜித், விஜய் ஆகியோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், இவா்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும், அவா்களைக் கொலை செய்ய, சரவணனின் தந்தை, சகோதரா்கள் மற்றும் நண்பா்கள் சோ்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மயிலாப்பூா், நொச்சி நகரைச் சோ்ந்த கொலை செய்யப்பட்ட சரவணனின் தந்தை முருகேசன் (62) வீட்டில் மயிலாப்பூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு வெடி குண்டு, 5 பட்டாக் கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா் விசாரணையில் கண்ணகி நகரை சோ்ந்த சுனாமி சுரேஷ் என்பவரிடம் இருந்து நாட்டு வெடிகுண்டும், செம்மஞ்சேரியை சோ்ந்த காா்த்திக் என்பவரிடம் இருந்து பட்டாக் கத்திகளை வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, கொலை செய்யப்பட்ட சரவணனின் தந்தை முருகேசன், அவரது மகன்கள் மு.முருகன் (30),மு.காா்த்திக் (23) மற்றும் நொச்சி நகரைச் சோ்ந்த ஏ.பிரவீண்குமாா் (24) ஆகிய 4 பேரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com