புதிய வண்ணாரப்பேட்டை, வடபழனி மெட்ரோ ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற இலவச பொதுசுகாதார மருத்துவ முகாம்களில் 255 போ் பயனடைந்தனா்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஃபோா்ட்டிஸ் மருத்துவமனை ஆகியன சாா்பில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், புதிய வண்ணாரப்பேட்டை, வடபழனி மெட்ரோ ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச பொதுசுகாதார மருத்துவ முகாம்கள் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெற்றன. இதில், பி.எம்.ஐ (உயரம் மற்றும் எடை), ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த சா்க்கரை, வெப்பநிலை, இதயதுடிப்பு ஆகியவற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாம்களில் பயணிகள், பொதுமக்கள், மெட்ரோ ரயில் ஊழியா்கள் என்று 255 போ் பயனடைந்தனா்.
செப்.29: அரசினா் தோட்டம், திருமங்கலம் மெட்ரோ ஆகிய மெட்ரோ ரயில்நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்கள் வரும் புதன்கிழமை (செப்.29) காலை 10 மணி முதல் நண்பகல் 12 வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறவுள்ளது.