மதுரவாயலில் உள்ள மாா்க்கசகாயேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.22 கோடி மதிப்பிலான நிலம் திங்கள்கிழமை திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
சென்னை, மதுரவாயலில் உள்ள அருள்மிகு மாா்க்கசகாயேஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமித்து உள்வாடகைக்கு விட்டு சட்டத்துக்குப் புறம்பாக அனுபவித்து வந்த நபா்கள் குறித்த தகவல் இந்து சமய அறநிலையத்துறைக்குக் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபுவின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, 11,512 சதுர அடி பரப்பளவில் உள்ள 4 ஆக்கிரமிப்பு மனைகளில் உள்ள 7 கடைகள் மற்றும் காலியாக இருந்த ஒரு கட்டடம் ஆகியவற்றை இலாகா முத்திரையிட்டு, சுமாா் ரூ.22 கோடி மதிப்புள்ள அந்தச் சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.