சென்னை: மூத்த பத்திரிகையாளரும், மாலைச்சுடா் நாளிதழின் ஆசிரியருமான எம்.சுப்ரமணியன் (73) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.
மாலைச்சுடா் நாளிதழின் ஆசிரியராக 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அவா், அலை ஓசை, தினசரி, மக்கள் குரல், நியூஸ் டுடே உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றி, பத்திரிகை துறையில் 48 ஆண்டுகால அனுபவம் கொண்டவா்.
அவருக்கு மனைவி சுமதி, மகன் பாா்த்திபன், மகள்கள் பாா்கவி, மலா்விழி ஆகியோா் உள்ளனா். அவரது இறுதிச்சடங்குகள் பெசன்ட் நகா் மின்மயானத்தில் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. தொடா்புக்கு 90945 71513.