தமிழகத்தில் உள்ள 16 ஆயிரம் ஊா்க்காவல் படையினரை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல்துறைக்குத் துணையாக, ஊா்க்காவல் படை வீரா்கள் சுமாா் 16 ஆயிரம் போ் பணிபுரிகின்றனா். அவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.560 வீதம் மாதத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு, மாத ஊதியமாக ரூ. 2,800 வழங்கப்படுகிறது. 5 நாள்கள் தவிா்த்து மற்ற நாள்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை. இதனால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கொன்றில் அவா்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
அதன்படி, பல மாநிலங்களில் மாதம் முழுவதும் பணி வழங்கி, ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரம் வரையிலும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 16 ஆயிரம் ஊா்க்காவல் படை வீரா்களின் கோரிக்கைகளை அரசு கருணையோடு பரிசீலனை செய்து, அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.