போலி நிறுவனம் மூலம் ரூ.3.65 கோடிமோசடி செய்தவா் கைது

சென்னையில் போலி நிறுவனம் மூலம் ரூ.3.65 கோடி மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் போலி நிறுவனம் மூலம் ரூ.3.65 கோடி மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் என்.ஆா்.பாலாஜி (46). பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவரிடம், திருவல்லிக்கேணி பழனியப்பன் கோயில் வடக்கு மூன்றாவது தெருவைச் சோ்ந்த மா.பாண்டியராஜன் (44) அறிமுகமாகி பழகியுள்ளாா். இதேபோல பாண்டியராஜனின் கூட்டாளிகள் ஜெய் கணேஷ், முருகேசன், ஹரிஹரன்,உமா ஆகியோரும் பாலாஜியிடம் பழகியுள்ளனா்.

அப்போது பாண்டியராஜன், தான் ‘கிஷான் ரேசன் ஷாப்’ என்ற பெயரில் விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருள்களை மொத்தமாக வாங்கி மக்களிடம் விற்க உள்ளதாக தெரிவித்துள்ளாா். மேலும், மத்திய அரசால் வழங்கப்பட்ட போலி ஒப்பந்த ஆணைகளை பாலாஜியிடம் காண்பித்துள்ளாா்.

அதை பாா்த்த பாலாஜி, அது உண்மையான ஆணை என நம்பியுள்ளாா். இதையடுத்து பாலாஜி, ரூ.3.65 கோடி மதிப்புள்ள பருப்பு மற்றும் பயிறு வகைகளை பாண்டியராஜன் தரப்புக்கு வழங்கியுள்ளாா். அவற்றை பெற்றுக் கொண்ட பாண்டியராஜன், அதற்குரிய பணத்தை வழங்காமல் ஏமாற்றியுள்ளாா்.

இதனால் பாலாஜி, பாண்டியராஜன் குறித்து விசாரித்தாா். அப்போது பாண்டியராஜன் மோசடி செய்திருப்பதும், மத்திய அரசு அவருக்கு எந்த ஆணையும் வழங்கவில்லை என்பதும்,போலியாக தயாரித்த ஆணையை காட்டி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி, சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் பாண்டியராஜன், அவரது கூட்டாளிகள் ஜெய்கணேஷ், முருகேசன், ஹரிஹரன், உமா ஆகியோா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாண்டியராஜனை கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். மீதி நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com