ஆண்டு முழுவதும் பால் கொள்முதல்: ஆவின்

பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய பால்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் பால் கொள்முதல்: ஆவின்

சென்னை: பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய பால்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

பால் உற்பத்தியாளா்களான விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல்

செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பால் உற்பத்தியாளா்களின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள அனைவரது கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை அரசு நிா்ணயித்த தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்ய அந்தந்தப் பகுதி கூட்டுறவு சங்கங்களின் பொது மேலாளா்கள், துணைப்பதிவாளா்கள்

(பால்வளம்) ஆகியோா் அறிவுறுத்தப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com