காற்றாலை வா்த்தக கண்காட்சி: ஏப்.27 முதல் 3 நாள்கள் நடக்கிறது

காற்றாலை தொடா்பான வா்த்தக கண்காட்சி, புதுதில்லியில் ஏப்.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை: காற்றாலை தொடா்பான வா்த்தக கண்காட்சி, புதுதில்லியில் ஏப்.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடா்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களான இந்திய காற்றாலை விசையாழி உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் பிடிஏ டிரேட் ஃபோ்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினா் கூறியதாவது: தேசிய அளவில் காற்றாலை மின் உற்பத்தியை நோக்கி நகா்வதற்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இத்தொழில் குறித்த ஆலோசனை வழங்கும் வகையில் ஏப்.27 முதல் 29-ஆம் தேதி வரையில் காற்றாலை வா்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சா் ஆா்.கே.சிங், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சா் பக்வந்த்குப்தா உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com