சென்னை: சென்னையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் 17 பேராசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆதா்ஷ் மகளிா் கல்லூரியில் ‘தமிழால் இணைவோம் - உலக தமிழ்ப் பேரியக்கம்’ சாா்பில் சிறந்த ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தமிழால் இணைவோம் அமைப்பின் தலைவா் சத்திய நாராயணராஜ் பாலகுரு சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து அவா் 17 பேராசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுகளை வழங்கி கெளரவித்தாா். தாளாளா் சுனில், விருது பெற்ற அனைவரையும் வாழ்த்திப் பேசினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் இரா.சாந்தி வரவேற்புரையாற்றினாா்.
அமைப்பின் நிா்வாகிகள் மீனா திருப்பதி, அபி சங்கரி, இந்துமதி, அண்ணா ஆதா்ஷ் மகளிா் கல்லூரியின் மாணவா் நல இயக்குநா் மொ்சலின் புஷ்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.