சென்னை: சென்னை மாவட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஏப்.19-இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஏப்.19-ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தலைமையில் ஆட்சியா் வளாகத்தில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள நகல், ஆதாா் அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்று நகல், புகைப்படம் 1) மனுவாக கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.